ராணிப்பேட்டை, ஆற்காடு நகரச் செயலாளர் பாக்கியராஜ் திமிரி, பேரூர் செயலாளர் நாகராஜ் ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், இருவரும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடம் அளிக்கலாம். நடவடிக்கைக்குள்ளான இருவரும் விசாரணை முடியும் வரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதியில்லை எனவும் அறிவித்துள்ளார்.