கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷா, மற்றும் பல நடிகைகளை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசிய வீடியோ வைரலானது. மேலும் இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சேரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பகிரங்கமாக ஏ.வி.ராஜூ மன்னிப்பு கோரியுள்ளார்.

த்ரிஷா மாதிரி பொண்ணு தான் வேண்டும் என கேட்டதாக சொன்னேன் த்ரிஷாவை கேட்டதாக கூறவில்லை. நான் பேசியதை சித்தரித்து வீடியோவை வெளியிட்டுள்ளனர் என கூறியுள்ளார்.