நெல்லையில் கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். திசையன்விளை அருகே கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகிய 3 பள்ளி மாணவர்களின் உடல்களும் நேற்றிரவு கரை ஒதுங்கின. இந்நிலையில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கி CM ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.