முதல்வர் ஸ்டாலின் தலைமையில்பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், 10,000 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்க மதி என்ற வாகனம் வழங்கப்படும் என தெரிவித்தார்