ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நிலையில், காரில் இருந்து இறங்கியபோது போலீஸ் ஏட்டு ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் நெஞ்சில் குண்டு பட்டு நபா தாஸ் படுகாயமடைந்தார். இதையடுத்து அவசர ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.