தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்சியில் ஏப்ரல் 24-ஆம் தேதி தொடர்களைத் திரட்டி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, நீதிமன்றத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்று தெரியவில்லை. எனவே நீதி மக்கள் மன்றத்தில் கிடைக்கும் என்பதால் மக்களை சந்திக்க இருக்கிறோம். மேலும் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. நேரம் ஒதுக்கப்பட்டால் நிச்சயம் அவரை சந்திப்போம் என்று கூறினார்.