ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும். மேலும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் வருகிற திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.