பாஜக மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணி பிரச்னையில் எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் ஆழமாக சொல்லிவிட்டேன். இறுதி முடிவை இனி தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்; அது அவர்களின் விருப்பம் என மறைமுகமாக அதிமுகவை விமர்சித்த அண்ணாமலை, 39 தொகுதிகளுக்கும் பாஜக நாடாளுமன்றக் குழு அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.