சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, தற்காலிக அவைத்தலைவராக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை நியமித்திருப்பதாக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அவரின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
#WATCH | சென்னை வானகரத்தில் நடைபெற்றுவரும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வந்த உடன் மறுக்கப்பட்ட அனுமதி!
அழைப்பிதழ் வைத்திருந்தும் தங்களை அனுமதிக்க மறுப்பதாகக் கூறி பாதுகாவலர்களிடம் முட்டி மோதியதில் பலர் கீழே விழுந்ததால் பரபரப்பு.#SunNews | #EPS | #AIADMK pic.twitter.com/EZDN0jBGSe
— Sun News (@sunnewstamil) December 10, 2025
இந்நிலையில், கூட்டம் தொடங்கும் முன்பாக நுழைவாயிலில் சிறுகால அவசர நிலை ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி வேனில் உள்ளே சென்றபோது, அதே நேரத்தில் அதிமுகவினர் கூட்டமாக உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் தடுமாறி விழுந்தும், பின்னர் எழுந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
