அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் வருகின்ற 26 ஆம் தேதி ஈபிஎஸ் போட்டி இன்றி பொதுச் செயலாளராக தேர்வாக வாய்ப்புள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் உச்ச பதவியில் இபிஎஸ் அமர்கிறார்.