சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போதும், மழை பெய்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில், அடுத்த 3-4 மணி நேரத்திற்கு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.