பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் பாஜக ஆதரவுடன் பதவி ஏற்கின்றார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான இவர், ராஷ்டிரிய ஜனாத தளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி செய்து வருகிறார். ஆனால் இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைய உள்ளார். இதற்காக இன்று பீகார் மாநில ஆளுநரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளார்.