ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை எடுத்து மாவட்ட நிர்வாகம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் சமரசம் எட்டாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் கிராம கமிட்டி, தென்கால் பாசன சங்கம் இடையே ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.