மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அகவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே கோதுமை உள்ளிட்ட விளைபொருட்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.