மதுரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

காரைக்குடியை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில்,  மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது. மாநாட்டிற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை எனவும், தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரையில் அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. 4 மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து விட்டனர், கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. மதுரை மாநாட்டில் வெடி பொருட்களோ, பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக தரப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்தநிலையில்,  சேது முத்துராமலிங்கம் தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது.