உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ், இப்போது வந்த தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்” என நேரடியாக தாக்கி வாதிட்டனர்.