நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நிழற்குடையின் கீழ் நின்றிருந்த 3 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.