சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த  விவகாரத்தில், தலைமறைவாக இருந் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் ஆம்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.