தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைதொகுதிகளுக்கும் வேட்பாளர்களைதேர்வு செய்ய பாஜக முடிவெடுத்துள்ளது.வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பாளர்களை 10 நாட்களில் அண்ணாமலை நியமிக்க உள்ளார். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளின் பட்டியலை தயார் செய்யவும், எந்த குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யவும் அவர் முடிவெடுத்துள்ளார். இதற்கான வேலை பரபரப்பாக நடக்கிறது.