ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நீதி வழங்க ஒட்டுமொத்த நாடு ஒற்றுமையாக நின்றது.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகளை நாம் அழித்தோம். தீவிரவாதத்தை இந்தியா வேட்டையாடியதை மே 7-ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமே கண்டது. அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் செல்ல தயார் என கூறியுள்ளார்.