ஜெய்ப்பூர் நகரம் துர்காபுரா பகுதியில் உள்ள RBL வங்கியில் இருந்து ஒரு இளைஞர் ஜஸ்வந்த் ₹9.50 லட்சம் பணத்தை எடுத்துவிட்டு வெளியே வந்திருந்தார். அப்போது, போலீசாக கூறிக்கொண்ட நால்வர் கொண்ட குழுவினர், காரில் வந்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் நிகழ்ந்தது. ஜஸ்வந்தை சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச் சென்று, பணத்தை பறித்து, பின்னர் அவரை விட்டு விட்டு சென்றனர்.
‘प्लीज बचा लो…’, चीखता रहा युवक, अपहरण का वीडियो
जयपुर के दुर्गापुरा में एक चौंकाने वाली घटना सामने आई, जहां कार सवार बदमाशों ने बैंक से 9 लाख रुपये निकालकर बाहर निकले युवक जसवंत का अपहरण कर लिया. खुद को पुलिसकर्मी बताकर उसे उठाया और करीब 2 किमी दूर ले जाकर पटक कर भाग गए.… pic.twitter.com/bbNR0cJq5b
— NDTV India (@ndtvindia) July 26, 2025
இந்நிலையில், சிசிடிவி வீடியோவில், ஜஸ்வந்த் குற்றவாளிகளுடன் சிரித்தபடி உரையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது இந்த சம்பவம் பற்றி சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. சம்பவத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. போலீசார் இந்த வழக்கை பரஸ்பர பரிவர்த்தனை அல்லது பழிவாங்கும் வகையிலான சம்பவமாக இருக்கலாம் என கருதி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தின் சீரிய தன்மை இதுவரையும் பாதிக்கப்பட்ட ஜஸ்வந்த் அதிகாரப்பூர்வ புகார் அளிக்காததாலேயே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள், ஜஸ்வந்தின் நெருக்கமான நண்பர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தற்போது சம்பவம் குறித்த முழுமையான சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, பல கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
