சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் மொத்தம் 1586 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 263 நபர்கள் காய்ச்சல் பாதிப்பு கொண்டவர்களாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

சமுதாய மற்றும் சமூக விழாக்களில் அதிக அளவில் கூட்டம் கூடும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம். இதனிடையே பள்ளி மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.