தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கருப்பு பணம் கடத்தப்படுவதாக தமிழக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில்  புனலூர் பகுதிக்கு வந்த நிலையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த 2 நபர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

அப்போது அந்த நபர்கள் பதட்டமடைந்ததால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த நிலையில் கட்டுக்கட்டாக கருப்பு பணம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து ரூ. 34 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்துல் அஜீஸ் மற்றும் பாலாஜி என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.