கொரோனாவை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவி தேவை என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கருத்தை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உலகில் மிகப்பெரிய சாதனை என்று புகழாரம் சூட்டினார். கொரோனா தொற்றுகள் குறித்து முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.