பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துரையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் யுகேந்திரன் மற்றும் விணுஷா வெளியேறினார்கள். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது.  கடந்த வாரம் வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் 5 பேர் புதிதாக வீட்டிற்குள்  வந்துள்ளார்கள்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா-நிக்சன் இருவரும் காதலில் விழுதுள்ளார்கள். இந்நிலையில் பிக்பாஸில் ஐஸ்வர்யா – நிக்சனின் கண்ணாடி முத்தம், ஐஸ்வர்யா வீட்டில் புயலை கிளப்பியுள்ளது. கோபத்தின் உச்சிக்கே சென்ற ஐஸ்வர்யாவின் பெற்றோர், பிக்பாஸ் செட்டுக்கே வந்துவிட்டனர். தங்களது மகளை உடனடியாக வெளியே அனுப்பும்படி பல மணிநேரம் போராடியுள்ளனர். ஆனால், இறங்கி வராத நிகழ்ச்சி தயாரிப்பு குழு. இதுபோன்று செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்பதாக கூறி பெற்றோரை திருப்பி அனுப்பியுள்ளது.