பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 90 நாட்களைக் கடந்துள்ளது. கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில்  தற்போது வெளியாகியுள்ள முதல் புரோமோ வைரலாகி வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சியில்  தற்போது நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், ரக்ஷிதா, சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் 7 நபர்கள் மட்டுமே தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
இதையடுத்து இந்நிகழ்ச்சியின் 2-வது புரோமோ ஆனது இன்று வெளியாகி வைரலாக பரவி  வருகிறது. அதில் இதற்கு முன்னே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல், ஜி.பி.முத்து, சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகிய  போட்டியாளர்கள் ரீ  என்ட்ரி கொடுத்துள்ளதால், உள்ளே வந்த ஜி.பி. முத்துவிடம்,”திரும்ப அனுப்பும்போது தான் போகணும்” என்கிறார், பிக்பாஸ். அதற்கு நீங்க போக சொன்னாலும் நான் போக மாட்டேன். வெளியே அவ்வளவு பாடுபட்டுட்டேன் என்று ஜி.பி.முத்து கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் கார்டன் பகுதியில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, சாந்தி “எல்லோருக்கும் காபி போடட்டுமா?” என கேட்கிறார். இதற்கு ஜி.பி. முத்து காபி போடுங்க. உப்புமா பக்கம் போய்டாதீங்க என கலாய்த்துள்ளார். இந்த புரோமோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி  வருகிறது.