
நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் பிரபு (29) என்பவர் தனது செல்போனில் மாணவி குளிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதை பார்த்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல்துறையினர் பிரபுவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.