தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற நல்ல செய்தியும் வெளியாகி உள்ளது. இந்த தொகை ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.