ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சார்பில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதியுதவியை பெற ஏராளமான மக்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 85 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.