2022-23ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் உடனே செய்யுங்கள். இன்றுக்குள் ஐடி தாக்கல் செய்யவில்லை என்றால், 5 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு ரூ.1000, 5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமான பெறுபவர்களுக்கு ரூ.5000. டிசம்பர் 31க்கு பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

இன்றுக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய தவறினால், வருமான வரி தாக்கல் செய்யாத வரை மாதத்திற்கு ஒரு சதவீதம் கூடுதல் வட்டி விதிக்கப்படும். மேலும், குறைவான வருமானத்தை அறிவித்தால் 50 சதவிகிதம் அல்லது தவறான வருமானத் தகவலை கொடுத்தால் 200 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படலாம். இந்த அபராதம் மொத்த வரி தொகையில் விதிக்கப்படும். ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்கள் வரி விலக்கில் இழப்பை சந்திக்க நேரிடும்.