இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலையில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த எண்பத்தி ஒரு பேரின் வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் காணாமல் போனது.

விசாரணையில் யுபிஐ மூலம் ஒருவரின் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்டதாக கூறி அனுப்பிய தொகையை திருப்பி அனுப்புமாறு கேட்கின்றனர். அதன் பிறகு அதன் மூலம் அவர்களது வங்கி மற்றும் பிற விவரங்களை திருடி அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. அதனைப் போலவே மகாராஷ்டிரா மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் ரூ.1,169- க்கு டவல்கள் ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால் அவரின் வங்கி கணக்கில் இருந்து 19 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. இது பற்றிய அவர் வங்கிக்கு புகார் அளித்தார். அதன் பிறகு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் அந்த மூதாட்டி இடம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன் மூலம் மேலும் 8 லட்சத்தை அபேஸ் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.