திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி நேற்று ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருப்பதி திருமலையில் அலிப்பிரிமற்றும் ஸ்ரீவாரி மெட்டுவழியாக மலையேறி வரும் பக்தர்களுக்கு இலவச திவ்ய டோக்கன் கொடுக்கும் முறையை மீண்டும் அமல்படுத்தி இருப்பதாக TTD தலைவர் சுபா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த நடைமுறை இரண்டு வருடங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் காரணமாகவும் கோடை நெருக்கடியை சமாளிக்கவும் 300 ரூபாய்க்கு டிக்கெட் களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.