வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸின் அதிரடி அரை சதம் மூலம் வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தொடரைச் சமனுக்குக் கொண்டு வந்துள்ளது. சட்டோகிராமில் நடந்த இந்தப் போட்டியில், அயர்லாந்து அணி நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை வங்கதேசம் 2 பந்துகள் மீதமிருக்க எட்டிப் பிடித்தது.
லிட்டன் தாஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் மஹிதி ஹசன் 18 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெற்றி ரன்கள் அடிக்க உதவிய லிட்டன் தாஸின் ஆட்டத்தை, அதிர்ஷ்டமே காப்பாற்றியது என்றால் அது மிகையல்ல. வங்கதேசம் 94 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 11-வது ஓவரின் 4-வது பந்தில் ஜோசுவா லிட்டில் வீசிய ஷார்ட் பந்தை லிட்டன் தாஸ் டீப் மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார்.
Out or not out? Brilliant efforts by Irish fielder Delany on T20 cricket match against Bangladesh! #BDvIRE pic.twitter.com/jkAuOVyACY
— TS10 (@SamsTi09) November 29, 2025
எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த கரேத் டெலானி பின்னோக்கி ஓடிச் சென்று, பந்தைப் பிடித்தார். அப்போது வேகம் குறையாமல் இருந்ததால், அவர் பவுண்டரி கோட்டைக் கடப்பதைத் தவிர்க்க, பந்தைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பிடிப்பதற்காக உள்ளே ஓடினார். ஆனால், அப்போது டெலானியின் இடுப்பில் செருகியிருந்த துண்டு பவுண்டரிக் குஷனில் உரசியது.
டி.வி. நடுவர் அதைச் சரிபார்த்தபோது, துண்டு என்பது வீரரின் உபகரணத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதால், பவுண்டரியைத் தொட்ட அந்தச் செயலை சிக்ஸராக அறிவித்தார். இதனால் லிட்டன் தாஸ் ஆபத்தில் இருந்து பிழைத்தார். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை தக்காவில் நடைபெற உள்ளது.
