வருகிற  பிப்ரவரி 26-ஆம் பி.எட் சிறப்பு கல்வி கணினி வழி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞான பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட் சிறப்பு கல்வி செயற்கைக்கான கணினி வழி நுழைவு தேர்வு வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.