ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “மக்களை நாடி சென்று கண்டிப்பாக நியாயம் கேட்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றி உள்ளனர். அவர்கள் வகுத்து கொடுத்த சட்டவிதியை காப்பாற்ற போராடி வருகிறோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றியதை ரத்துசெய்ய யாருக்கும் உரிமையில்லை.

எடப்பாடி பழனிசாமி தான் தி.மு.க-வின் A-Z டீம். ஒவ்வொன்றாக பொது வெளியில் வரும். என்னையும், சசிகலாவையும் அ.தி.மு.க-வில் சேர்க்க மாட்டோம் என இபிஎஸ் சொல்கிறார். இது அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா?.. ஆணவத்தின் உச்சத்தில் EPS இருக்கிறார். கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன். இதையடுத்து மார்ச் மாதம் இறுதிக்குள் முப்பெரும் விழா நடத்தப்படும்” என உறுதிப்பட தெரிவித்தார் ஓபிஎஸ்.