ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளும் போட்டியிடுகிறது. அதன் பிறகு அதிமுகவில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இன்று மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றுமே செய்யவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். நான் இப்போது ஆதாரத்தோடு கூறியுள்ளேன். உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் உடனே கண் மருத்துவரை பார்த்து கண்ணாடி வாங்கி போடுங்கள் என்று கூறினார். நான் பேசியதை கேட்டாவது இனி தெரிந்து கொள்ளுங்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றி விட்டது. மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.