தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அதன் பிறகு சாலை மார்க்கமாக பன்னீர்செல்வம் திருச்சியில் இருந்து பெரிய குளத்திற்கு சென்றார். அங்கு இறந்த தன் தாயின் உடலை பார்த்து ஓ. பன்னீர்செல்வம் காலை பிடித்து கதறி அழுதார்.

இதைப் பார்த்து அனைவரும் கலக்கண்கலங்கினர். இந்நிலையில் பழனியம்மாளின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு முக்கிய பிரபலங்கள் பலரும் நேரில் வந்து பழனியம்மாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து இன்று மாலை 4.30 மணி அளவில் பழனியம்மாளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பழனியம்மாவின் உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.