தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து சுற்றுலா செல்வோர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.