ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 109 மற்றும் 103 ரன்கள் எடுத்திருந்தது. முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலியா அணி ஒரு மணி நேரத்திலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் காரணமாக ஆஸ்திரேலியா அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். மேலும் ஒரு வேளை இந்தியா தோல்வியடைந்தால் இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.