காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,‌ 2023-24 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகள் மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த தேர்வுக்கு மாணவர்கள் http://cute.samrath.ac.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். மார்ச் 12 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முழுமையான தகவல்களை www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.