மகரம் ராசி அன்பர்களே..!
இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும்.

குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும்.

வீண் பழி சுமக்க நேரிடும் என்பதால் கவனம் என்பது வேண்டும். இன்று சரியான நேரத்திற்கு உறங்கச்செல்ல வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தெய்வ அருளால் நினைத்தது அனைத்தும் நடக்கும். காதலில் உள்ளவருக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்துக்கொள்ள வேண்டும். நீளம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.