பெங்களூரு, கலபுராகி டவுன், பிரம்மபுரா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஒற்றைத் தாயுடன் வசித்து வந்துள்ளார். தந்தை மறைவுக்கு பின், அவரது தயார் அருகில் உள்ள விடுதி காப்பகம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். விடுதி காப்பாளராக பணிபுரியும் தாய், அரசு ஊழியர் ஒருவருடன் நெருங்கி பழகி வீட்டில் அடிக்கடி சந்தித்து தவறான உறவு முறையில் இருந்து வந்துள்ளனர்.  இந்த விவகாரம் மகளுக்கு தெரிய வந்ததை அறிந்த தாய், அதை வெளியில் கூறாமல் இருக்க பல சித்திரவதைகள் செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அவள் மீது சமீபத்தில் வெந்நீரை ஊற்றி காயப்படுத்த,  கொடுமை தாங்க முடியாமல், அதிர்ச்சியடைந்த சிறுமி தைரியமாக பிரம்மபுரா காவல் நிலையத்தில் உதவி கேட்டு, தனது தாய் மீது புகார் அளித்துள்ளார். காயமடைந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தாய் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே  பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.