தென் இந்திய திரையுலகில் அறிமுகமாகி இப்போது இந்தியளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி சாகுந்தலம் படம் வெளியாகிறது. இதையடுத்து குஷி படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ஹிந்தியில் வெப் சீரிஸ் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார் சமந்தா. அதோடு 4 ஹிந்தி படங்களிலும் சமந்தா கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா தன் வாழ்க்கையில் அந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்திருக்கவே கூடாது என நினைத்து வருத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, தன்னுடைய திருமணத்தை நினைத்து தான் வருத்தப்படுகிறாராம். திருமணம் செய்திருக்கக்கூடாது என சொல்லி அவர் வருத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்ற 2017-ம் வருடம் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சமந்தா ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.