
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ. கருப்பையா, வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு ஒரு அடிப்படை குடும்பம் எதுவும் செய்ய முடியாது. ஏதோ ஒன்றுமில்லாததற்கு இது கிடைத்தால்… சும்மா கொடுத்தால் நாமே ஏதாவது போற வழியில் ஒருத்தன் நார்த்த முட்டாய் கொடுத்தால் சரி அவன் சும்மா கொடுக்கின்றான் என்று வாயில வாங்கி போட்டுட்டு போவோம், அதே மாதிரி தான் இது.
டாஸ்மாக்கில் ஒரு குடிகாரன் 10,000 ரூபாய்யை மாதம் செலவழிக்கிறான். ஒரு நாளைக்கு 250 ரூபாய்.. மாதம் 7,500 சைடிஸ் எல்லாம் சேர்த்து 10,000. இதில் 8000 ரூபாயை வைத்துக்கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறான். 48 ஆயிரம் இந்த மக்களிடம் சுரண்டப்பட்டு, இவர்கள் கொடுப்பது 12,000. இவர் மகளிர் கொடுப்பது 12000. இவர் சுரண்டுவது 48,000.
பீகாரே வெளியே வந்துவிட்டது. ரொம்ப ஏழை நாடு. குடியை ஒழித்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மறந்து விடுவார்கள் என்று அந்த நாடு தின்னமாக நம்புகிறது. இரண்டு விஷயம் தான். ஒன்று டாஸ்மார்க் கல்லால் வரி கட்டாமல் போகிற சரக்கு எல்லாம் உங்க வீட்டுக்கு வருகின்றன. அப்புறம் இதில் இன்னொரு பிளாக் வியாபாரம் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்கு சொந்த வருமானமும் வருகிறது, அரசாங்கத்துக்கு வருமானமும் வருகின்றது என தெரிவித்தார்.