கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் சாந்தா(87) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கிணற்றின் அருகே இவர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இவர் அங்கிருந்த மோட்டார் பைப்பை பிடித்துக் கொண்டு சுமார் 4 மணி நேரம் போராடி உள்ளார். இந்நிலையில் மூதாட்டியின் பேரன்கள் இவரை காணவில்லை என்று தேடியுள்ளனர். இதையடுத்து கிணற்றை எட்டி பார்த்தபோது மூதாட்டி கிணற்றில் இரும்பு பைப்பை பிடித்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைவாக செயல்பட்டு கிணற்றில் இறங்கி மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.