
தூத்துக்குடி கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்துள்ள பகுதியில் எட்டுராஜ் மகன் அருண்சந்தோஷ்(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் முத்துநகரில் உள்ள அருண் பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அருண் பிரகாஷ் கருங்காலிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்திற்கு அருண் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோருடன் சென்றுள்ளார்.
அங்கு அருண் சந்தோஷ் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டி கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அந்த மாணவனின் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.