
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில், 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்ற முயன்றதற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஸ்கூட்டரில் பயணித்தபோது சாலையின் நடுவில் பாகிஸ்தான் கொடி சிக்கி இருந்ததைப் பார்த்து, அதை அகற்ற முயற்சி செய்தார்.
இதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகியது. இந்த சம்பவத்திற்கு பிறகு, “கிராந்தி சேனா” உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் பள்ளியைச் சுற்றி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தின. அவர்களது அழுத்தத்தினால், பள்ளி நிர்வாகம் மாணவியை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முடிவை எடுத்தது.
Muslim traitors of India, can be found in every corner of India.
In Saharanpur, a Pakistani flag was pasted on the road after the Pahalgam terror attack. A Muslim schoolgirl stopped her scooty and appeared to try removing the flag—sparking hope for a patriotic act.
But her… pic.twitter.com/vOhV0hdaft
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) May 1, 2025
இந்த முடிவை பல சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். ஒரு தேசபற்றுள்ள செயலைச் செய்த மாணவியிடம் பாராட்டுக்களை வழங்க வேண்டிய தருணத்தில், மத அடிப்படையில் தாக்குதல் நடத்தப்படுவது எச்சரிக்கைக்குரியது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டில் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் இந்தியப் பாடல்களை எஃப்எம் வானொலி சேனல்களில் ஒலிபரப்புவதைத் தடை செய்துள்ளது. இந்நிலையில், தேசப்பற்றுள்ள மாணவிக்கு நேர்ந்த தவறான முடிவு சமுதாயத்தைப் பெரிதும் சிந்திக்க வைக்கிறது.