இஸ்ரேல்,காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட்ட போது ஈரான் மீதும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஈரான் தங்களின் வலிமையை காட்டும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதன்படி பூமிக்கு அடியில் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. ஆனால் அமெரிக்க அரசு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று எச்சரித்த நிலையில்,ஈரான் அதற்கு நேர் மாறாக 85 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை வெளியிட்டது ஈரானின் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் விதமாக உள்ளது.

தற்போது இந்த சுரங்கத்தை வீடியோவாக “ஏவுகணை நகரம்” என்று ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அதோடு இன்று ஆரம்பித்து அடுத்து 2 வருடங்களுக்கு வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த வீடியோவால் மத்திய கிழக்கை ஆட்டிப் படைக்க நினைக்கும் மேற்கு நாடுகள் அச்சத்தில் உள்ளது.