நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான Airtel ரூபாய்.99 விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டங்களை கிட்டத்தட்ட 17 பகுதிகளிலிருந்து நீக்கி இருக்கிறது. ரூ.99 விலைகொண்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு பதில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் தன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.155 விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது Airtel.

இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டத்தை 22 இடங்களில் வழங்கி வந்த நிலையில், இப்போது 19 இடங்களில் இத்திட்டத்தை நீக்கியுள்ளது. இதனிடையே உங்களது சிம் கார்டை செயலில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் ரூ.155 செலுத்தி ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். அதே நேரம் கொல்கத்தா, குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் Airtel இன்னும் ரூபாய்.99 ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.