
திண்டுக்கல் கரூர் சாலையில் எரியோடு அதிமுக கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பு தென்னை ஓலைகளால் பெய்யப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் வந்து அந்த பந்தலில் தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த பந்தல் தீப்பிடித்து எறிய தொடங்கியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
மேலும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அமைத்தனர். இருப்பினும் அங்கு இருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருள்கள் என அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து அதிமுக செயலாளர் அறிவாளி எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர்.